பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நாளை (பிப்.,23) இரவு 8.30 மணிக்குமேல் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக் கிறது.பழநி கிழக்குரத வீதியுள்ள மாரியம்மன்கோயில் மாசிதிருவிழா பிப்.,5ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கி பிப்.,25 வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் பிப்.,10ல் நடந்தது. கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றியும், அக்னிச்சட்டிகள் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவில் பிப்.,16ல் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் (தீச்சட்டி எடுத்தல்) அம்மன் தங்கமயில் வாகனத்தில் உலா வருதல் நடக்கிறது.
பூச்சொரிதல் ரத ஊர்வலம்: நாளை (பிப்.,23) இரவு 7.30மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கல்
யாணமும், வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் இரவு 9 மணிக்கு மேல் வலம்வரும்
ஆதிசக்தி அவ தாரம், சிவன் எமதர்ம "ரோபோ காட்சிகளுடன் மாரியம்மன் பூச்சொரிதல் ரத
ஊர்வலம் அடி வாரம் பாதவிநாயகர் கோயிலில் புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வரும்
நிகழ்ச்சிநடக்கிறது. பிப்.,24ல் மாலை 4.30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாநாட்களில் அம்மன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பிப்.,24 வரை பக்திசொற்பொழிவு நடக்கிறது. பிப்.,25ல் கொடியிறக்குதலுடன் விழாவுடன் நிறைவடைகிறது.