உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் இருளர் பாரம்பரிய வழிபாடு மாமல்லபுரத்தில் குவிந்தனர்

மாமல்லபுரம் இருளர் பாரம்பரிய வழிபாடு மாமல்லபுரத்தில் குவிந்தனர்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் குவிந்த இருளர் ஜாதியினர், பாரம்பரிய முறையில், தெய்வ வழிபாட்டை மேற்கொண்டனர்.

தமிழகத்தின் வடக்கு, வட மேற்கு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் எல்லை பகுதிகளில், வனங்களில் பழங்குடியினத்தை சேர்ந்த, இருளர்கள் வசித்து வருகின்றனர். வாழ்வாரத்திற்கு, பாம்பு கடி விஷமுறிவு மருந்து தயாரிப்பிலும், விறகு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மாசி மக நாளில், மாமல்லபுரம் கடற்கரையில் கூடி, கடல் கன்னியம்மனை வழிபடுவது, அவர்களின் பாரம்பரிய வழக்கம். இவ்வழிபாட்டிற்காக, கடந்த இரு நாட்களாக, பல பகுதிகளிலிருந்து, இங்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். கடற்கரை மணல் வெளியில் சேலை, வேட்டி உள்ளிட்டவற்றில் தடுப்பு அமைத்த சிறு திடலில், குடும்பமாக தங்கி, அங்கேயே சமைத்து உண்டு, உறங்கினர். பிப்.,22 காலை, கடலில் நீராடி, கரையில் அமைத்த வழிபாட்டு திட்டில், கன்னியம்மனை எழுந்தருள செய்து வழிபட்டனர். அருள்வாக்கு கேட்டு, வேண்டுதல் நிறைவேற்றினர். சிறுவர், சிறுமியருக்கு, முடிகாணிக்கையுடன், நேர்த்தி கடன் செலுத்தினர்; பிற சடங்குகளையும் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !