உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவில் 28ல் குண்டம் விழா துவக்கம்

அங்காள பரமேஸ்வரி கோவில் 28ல் குண்டம் விழா துவக்கம்

அன்னுார்: கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, 28ம் தேதி துவங்குகிறது. கஞ்சப்பள்ளியில், 100 ஆண்டுகள்  பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, 11ம் ஆண்டு குண்டம் திருவிழா வரும், 28ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் துவ ங்குகிறது. 29ம் தேதி குண்டம் இறங்குவோர் விரதம் துவக்குகின்றனர். மார்ச் 4 அதிகாலை, கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு  கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடக்கிறது. 7ம் தேதி மகா சிவராத்திரி திருவிழா, அம்மன் திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி  அதிகாலை 5:30 மணிக்கு கரகம், பூவோடு எடுத்தல், அக்னி குண்டம் இறங்குதல் நடக்கிறது. மாலையில் விசர்ஜன ஊர்வலம் நடத்தி, மேட்டுப் பாளையம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி காலையில், பேச்சியம்மன் பூஜை, படையல் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை  விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !