உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

போடி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

போடி: போடி அருகே ராசிங்காபுரத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பிப்.,26 நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராசிங்காபுரம் நரசிங்கப்பெருமாள், மகாலட்சுமி, பூமாதேவி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், நவக்கிரக கோயில் மகா கும்பாபிஷேகம் கோயில் கமிட்டி தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் நாகையசாமி, கவுரவ தலைவர் சூரன் கவுண்டர், பொருளாளர் கிருஷ்ணராஜ், துணைத்தலைவர் பொன்னம்பல வாசன், இணை செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

யாகசாலை பூஜை, கும்பாபிஷேகத்தினை ஜெகன்நாதபட்டாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர். கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. நரசிங்கப்பெருமாள், கன்னிமூல கணபதி, கருடாழ்வார், மகாலட்சுமி, பூமாதேவிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி பெட்டி கொண்டு வருதல், மூன்று நாட்கள் கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமிஹோமம், யாக பூஜைகள், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நரசிங்கப்பெருமாள் பொது ஜனசங்கத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !