உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வலம் வரணுமா! இதை ஞாபகத்தில் வச்சுக்கங்க!

பிரதோஷ வலம் வரணுமா! இதை ஞாபகத்தில் வச்சுக்கங்க!

பிரதோஷத்தன்று நீங்கள் சிவன் கோவிலுக்கு செல்கிறீர்கள். அன்று சிவாலயத்தை வலம் வர சில விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறை மறக்காமல் இருக்க வேண்டுமா? இதோ  எளிய வழி! நீங்கள் பிரதோஷவலம் வர இங்கே தரப்பட்டிருக்கும் படமும் உதவும்.

*நச நகோ நச கோ நச என்ற வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள்.  இதில்  ந என்பது நந்தியையும், ச என்பது சண்டிகேஸ்வரரையும்  கோ என்பது கோமுகியையும் (மூலஸ்தானத்தில் இருந்து அபிஷேக நீர் வெளியாகும் வழி) குறிக்கும்.
*முதலில் சிவன் சன்னிதி முன்பிருக்கும்  நந்தியை வணங்கி அங்கிருந்து இடமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி சென்று வணங்குங்கள்.
*மீண்டும் அதே வழியில் திரும்பி நந்தியை வணங்குங்கள்.
*நந்தியிடமிருந்து வலமாக  கோமுகி வரை செல்லுங்கள். கோமுகியிலிருந்து அதே வழியில் திரும்பி நந்தியை தரிசியுங்கள்.
*நந்தியிடம் இருந்து இடமாகச் சென்று சண்டிகேஸ்வரரை தரிசியுங்கள்.
*அதே வழியில் திரும்பி கோமுகி வரை செல்லுங்கள்.
*கோமுகத்திலிருந்து  இடமாகச் சென்று நந்தியின் முன் வந்து நின்று இரு கொம்புகளுக்கும் நடுவே தரிசியுங்கள்.
*நந்தியிடமிருந்து வலமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !