உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் மாசி மாத தெப்பல் உற்சவம்!

மேல்மலையனூர் கோவிலில் மாசி மாத தெப்பல் உற்சவம்!

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி திரு விழாவை முன்னிட்டு, தெப்பல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா, கடந்த 7ம் தேதி, மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அமாவாசையன்று, மயானக் கொள்ளையும், 11ம் தேதி மாலையில், தீமிதி திருவிழாவும் நடந்தது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, கடந்த 13ம் தேதி நடந்தது. 10ம் நாள் விழாவாக, நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, தெப்பல் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை தெப்பலில் ஏற்றி, தெப்பக் குளத்தில் சுற்றி வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பக்தி பாடல்களை பாடினர்.விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் நாகபூஷணி, அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !