உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோயில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். 8ம் நாளான நேற்று காலை அம்மனும் சுவாமியும் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கார கோலத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சார்பாக ராஜா பட்டரும் சுவாமி சார்பாக ஈஸ்வரன் பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். காலை 10.25 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில், செண்பக பட்டர், பாபு பட்டர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். ஒன்பதாம் நாளான இன்று காலை ஒன்பது மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !