மடத்துக்குளம் மாரியம்மன் கோவில் முளைப்பாரி வழிபாடு
ADDED :3517 days ago
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடப்பதை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர். மடத்துக்குளம் அருகே, கண்ணாடிபுத்துாரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. இந்தக்கோவிலை புதுப்பிக்கவும், கும்பாபிேஷகம் நடத்தவும் பொதுமக்கள் தீர்மானித்தனர். இதற்கான பணிகள் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.பல்வேறு கட்டுமானப்பணிகள் மற்றும் புதிய சிலைகள் அமைப்பு பணிகளுக்கு பின், கோவில் கும்பாபிேஷகம் மார்ச் 25 ம்தேதி நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு, கண்ணாடிபுத்துாரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் ஒன்றாக நேற்று மாலை, பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து கும்பாபிேஷகத்துக்கான பூஜைகள் தொடங்கின.