தேவகோட்டை மாரியம்மன் கோயில் பங்குனி விழா
ADDED :3515 days ago
தேவகோட்டை: தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை யொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தினமும் அம்மன் கரகம் வீதி உலா வந்து தீபாராதனை நடந்தன. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம்,பறவை காவடி,ரதகாவடி,வேல்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது.