உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 27ல் கொடியேற்றம்

விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 27ல் கொடியேற்றம்

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 27ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 8.01 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவை தொடர்ந்து வள்ளி திருமணம் நாடகம், இரவு 10 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.,3ல் நடக்கிறது. அன்று இரவு 8.01 மணிக்கு மாரியம்மன் கோயிலில் அடுப்பு பூஜை , தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதலும் நடக்கிறது. தேரோட்டம்: ஏப்.,4 பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் என நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப்.,5 மாலை 5மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை 7 மணிக்கு தேர் நிலை வந்து சேருதலும், மறுநாள் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. பொருட்காட்சி: விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி கே.வி.எஸ். மேல்நிலை பள்ளி மைதானத்தில் மார்ச்25முதல் ஏப்.,17 வரை பொருட்காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !