விருதுநகர் ஆலயங்களில் பெரிய வியாழன்
ADDED :3821 days ago
விருதுநகர்: விருதுநகரில் பெரிய வியாழனை முன்னிட்டு நேற்று மாலை கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்களால் , பக்தர்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது. விருதுநகர் தூய இன்னாசியர் ஆலயத்தில் பாதிரியார் ஞானப்பிரகாசம், பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், ஆர்.ஆர்.நகர் தூய வேளான்கண்ணி ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்ணபாஸ் ஆகியோர் தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி, பக்தர்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.