உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நள்ளிரவில் நடந்த, ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.புனித வெள்ளியன்று, சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஏசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த மூன்றாவது நாளில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்தது. இரவு, 10:45 மணிக்கு, துவங்கி, நள்ளிரவு 1:45 மணி வரை நடந்த, சிறப்பு திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.நேற்று காலை 6:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை, தமிழ், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், திருப்பலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !