விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :3517 days ago
வேலாயுதம்பாளையம்: பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு, வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள, விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதேபோல், மலை வீதி, காகித தொழிற்சாலை அண்ணா நகர், குமரன் நகர், தோட்டக்குறிச்சி மற்றும் காகித ஆலை குடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது.