கிணத்துக்கடவு கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :5177 days ago
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே சமயத்தில், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இப்பூஜையில், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், பன்னீர், அரிசிமாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பின், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 6.00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சிவலோகநாதரையும், நந்தியையும் வழிபட்டனர். தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், பெரியகளந்தை ஆதிஸ்வரன், அரசம்பாளையம் திருநீலகண்டர் போன்ற சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.