உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சாய்பாபா கோவிலில் ராமநவமி உற்சவம்!

உடுமலை சாய்பாபா கோவிலில் ராமநவமி உற்சவம்!

உடுமலை: உடுமலை சாய்பாபா கோவிலில், ராமநவமியையொட்டி நடந்த சீதாராம திருக்கல்யாணம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.  ராமநவமியை முன்னிட்டு, காலை, 7:30 மணிக்கு மங்கள இசை, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தன. காலை,  11:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரைக்கும், ராமநாம சங்கீர்த்தனமும், விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் மற்றும் சாயி சத்சரிதம் பாராயணம்  படிக்கப்பட்டது. மதியம், 12.30 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !