மாரியம்மன் கோவில் 108 சங்காபிஷேகம்
ADDED :3505 days ago
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, மாரியம்மன் கோவிலில், 108 சங்காபி?ஷகம் நடந்தது. ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலம், மாரியம்மன் கோவில், 27 ஆம் ஆண்டை முன்னிட்டு, மாரியம்மன், பகவதியம்மனுக்கு காவிரி ஆற்றிலிருந்து புனித நீராடி தீர்த்த காவடி, பால் காவடி எடுத்து வரப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. முன்னதாக திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து தமிழ் புத்தாண்டு, உலக நன்மை மற்றும் மழை வேண்டி, 108 சங்காபிஷேகம் நடந்தது.