சோழவந்தான் வைகை ஆற்றில் ஏப்.22ல் அழகர் இறங்குகிறார்
ADDED :3502 days ago
சோழவந்தான்: சோழவந்தான் வைகை ஆற்றில் ஏப்.22ல் வைகை ஆற்றில் இறங்குகிறார். சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. முக்கிய விழாவாக ஏப்.,22ல் சித்ராபவுர்ணமியன்று காலை 9.00 மணிக்கு மேல் சுவாமி அழகர் அலங்காரத்தில் வெண்குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருள்கிறார்.மறுநாள் இரட்டைஅக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் அரங்கில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்.,24ல் பூப்பல்லக்கு நடக்கிறது.