உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டியில் நாளை ஆற்றில் இறங்கும் அழகர்

சின்னாளபட்டியில் நாளை ஆற்றில் இறங்கும் அழகர்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறார். சின்னாளபட்டி கீழக்கோட்டையில் ராம அழகர் சுவாமி தேவஸ்தானம் சார்பிலும், மேட்டுப்பட்டியில் சுந்தரராஜ பெருமாள் நற்பணி மன்றத்தின் சார்பிலும் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த ஏப்.7ல் இருதரப்பிலும் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து நாளை (ஏப்.22)காலை ஏழு மணிக்கு மேல் 7.15 மணிக்குள் காந்திகிராமத்தில் உள்ள சஞ்சீவி ஆற்றில் குதிரை வாகனத்தில் ராம அழகர் சுவாமி எதிர்சேவை செய்கிறார். சீவல்சரகு கிராமத்தில் குடகனாற்றில் சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் எதிர்சேவை செய்கிறார். பின்னர் நகர்வலம் நடக்கிறது. தினந்தோறும் சுவாமி இரவில் தங்கும் பொன்விழா மைதானம் மற்றும் காந்தி மைதானத்தில் உள்ள கலையரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !