உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்த சுவாமி கோவில் சித்திரை மாத வசந்த உற்சவம்

திருப்போரூர் கந்த சுவாமி கோவில் சித்திரை மாத வசந்த உற்சவம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சித்திரை மாத வசந்த உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டுக்கான உற்சவம், 17ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து தொடர்ந்து, ஐந்து நாட்கள் உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள வசந்த மண்டபத்தில் காலை வேளையில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகள் நடைபெற்று, மீண்டும், இரவு, 7:30 மணிக்கு கோவிலை வந்தடைவார். இறுதி நாளான நேற்று, சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்று, மாட வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் பொருள் ஆண்டுதோறும், அர்ச்சனைக்குத் தேவையான மலர்களையும், இலைகளையும் கொடுக்கும் விருட்சங்கள், சுவாமியை தங்களுக்கு அருகிலேயே பார்ப்பதற்காக, சுவாமி, பூந்தோட்டங்களில் எழுந்தருளி, விருட்சங்களுக்கு காட்சி தருவதே வசந்த உற்சவம்.இந்த ஐதீகம், காலம், காலமாக பின்பற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !