உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகாய அன்னை சர்ச் விழா :ஏப்., 29ல் கொடியேற்றம்

சகாய அன்னை சர்ச் விழா :ஏப்., 29ல் கொடியேற்றம்

ராமநாதபுரம்;மண்டபம் முகாம் சகாய அன்னை சர்ச் 59வது தேர்ப்பவனி திருவிழா ஏப்., 29 மாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் தினமும் மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை சிந்தனைகள் நடக்கிறது. மே 7 மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதையடுத்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட சகாய அன்னை தேர்ப்பவனி நடக்கிறது. மே 8 காலை 5 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு கூட்டு திருப்பலிக்குபின் சிறுவர்களுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. ராமநாதபுரம், முத்துப்பேட்டை, கீழக்கரை, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், சூசையப்பர்பட்டினம், ராமேஸ்வரம், ஓலைக்குடா, அரியாண்குண்டு, தென்குடா, தேவிபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை எரோனிமுஸ் தலைமையில் விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !