உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபை. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோத்சவ விழா, 14 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.


அந்த வகையில், நடப்பாண்டிற்கான பங்குனி மாத பிரம்மோத்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 28ம் தேதி தேர் திருவிழா நடைபெறும்.


தினமும் உற்சவர் பெருமான், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அடுத்த மாதம், 3ம் தேதியுடன் பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !