லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி மகா யாகம்
புதுச்சேரி: குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நடந்த மகா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருமாம்பேட் பகுதியில் யோகமாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில், வளர்பிறை மற்றும் தேய்பிறை திதியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வசந்த நவராத்திரி விழா கடந்த 19ம் தேதி துவங்கியது.
இவ்விழாவையொட்டி, சகல செல்வங்கள் பெறவும், அமைதி வேண்டியும் தினசரி மாலை 5:00 மணிக்கு சிறப்பு மகா யாகம் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து, மகா அபிேஷம், சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடக்கிறது.
நேற்று மாலை நடந்த மகா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சங்கீத கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மகேஸ்வர சாஸ்திரிகள் செய்து வருகிறார். நவராத்திரி விழா, ராம நவமி தினமான வரும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.