உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை!

திருவல்லிக்கேணி: பார்த்தசாரதி கோவிலில், காலை கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் திருநாள் விழாவில் அதிகாலை 5:30 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள், கோபுர வாசலில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை ( 26ம் தேதி) அதிகாலை, 5:30 மணிக்கு பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். வரும், 28ம் தேதி, காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி பகல் 11:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 8:00 மணிக்கு கண்ணாடி பல்லக்கு வீதியுலாவும், மே 1ம் தேதி இரவு சப்தாவர்ணமும் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !