அவலூர்பேட்டையில் பூ பல்லக்கு திருவிழா
ADDED :3653 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மாரியம்மன் கோவிலில் பூபல்லக்கு விழா நடந்தது. அவலுார்பேட்டை மலர் தொடு வியாபாரிகள் சார்பில் பூ பல்லக்கு திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் அகத்தீஸ்வரர் கோவிலிலிருந்து மாடவீதி வழியாக 108 பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பால் அபிேஷகம் , தீபாரதனை நடந்தது. மாலை பூ பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.