சென்னிமலை பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :3587 days ago
சென்னிமலை: சென்னிமலை அருகே பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. சென்னிமலை அருகே, சொக்கநாதபாளையம் ஏரிக்காட்டில் உள்ளது பட்டத்தரசி அம்மன் கோவில். இந்த கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த, 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை எல்லைக்குமாரபாளையத்தில் இருந்து சுவாமி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தது. சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். பொங்கல் வைத்தல் நேற்று நடந்தது. இதில், சரளைக்காடு, கரைப்புதூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.