சித்தர் வேடமிட்டவர் வாக்கு பலித்து மழை பெய்தது
ADDED :3445 days ago
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, மழை பெய்ததால், சித்தர் வேடமிட்டவர் வாக்கு பலித்ததாக, பகுதிவாசிகள் கூறினர். இளம்பிள்ளை அருகே, கஞ்சமலை சித்தர்கோவிலில், 4ம் தேதி, சித்தர் திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், சித்தர் வேடமிட்டவர், 7 நாட்களுக்குள் மழை பெய்யும் என கூறினார். அதன்படி, அவர் வாக்கு கூறிய, 3ம் நாளான நேற்று இரவு, சித்தர் கோவிலின் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சித்தர் வேடமிட்டவர் கூறிய வாக்கு பலித்துள்ளதாக பகுதிவாசிகள் கூறினர்.