கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3565 days ago
புதுச்சேரி: கிழக்கு கடற்கரைச் சாலை கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் 31ம் ஆண்டு பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் விழாவாக நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.