உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டாயுதபாணி- பெயர் விளக்கம்!

தண்டாயுதபாணி- பெயர் விளக்கம்!

தண்டம் என்றால் கோல் அல்லது அபராதம். இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில்  அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புகிறார். முருகன் என்ற  ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித்  தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு சோதனைகள் என்னும் அபராதம்  விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !