உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா!

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு  நேற்று பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது. கடந்த 12ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் உற்சவர்  வீரட்டானேஸ்வரர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 19ம் தேதி காலை 7:00 மணிக்கு மூலவர், உற்சவர்  சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து காலை 8:00 மணிக்கு தீபாராதனை, 9:00 மணிக்கு உற்சவர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடந் தது.  நேற்று (20ம் தேதி) காலை 6:00 மணி முதல் 7:30 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடந்தது. தேரில் உற்சவர் திரிபுரசம்ஹாரமூர்த்தி சுவாமிகள் சிற ப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  மாலை 6:00 மணிக்கு திரிபுரசம்ஹாரம் (முப்புரம் எரித்தல்) நிகழ்ச்சியில் சரநாராயணபெருமாள் கரு டவாகனத்தில் எழுந்தருளி சரம் தந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !