உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் கருட சேவை உற்சவம்

செஞ்சியில் கருட சேவை உற்சவம்

செஞ்சி: செஞ்சி தாலுகா வாணிய வைசியர் சங்கம் சார்பில் சிங்கவரம் ரங்கநாதருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை  உற்சவம்  நடத்தினர். செஞ்சி தாலுகா வாணிய வைசியர் சங்கத்தினர் வைசாசி விசாகத்தை முன்னிட்டு சிங்கவரம் ரங்கநாதருக்கு கருட சேவை உற்சவம்  நடத்தினர்.  இதை முன்னிட்டு தாயாரம்மாள், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு ர ங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினர். சிங்கவரம் கிராமம் மற்றும் செஞ்சி கடை வீதி வழியாக சாமி வீதி உலா நடந்தது. அப்போது சென்டை மேளம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செஞ்சி தாலுகா வாணியர் வைசியர் சங்கத்தினர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பாகவத கோஷ்டியினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !