உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருத்தணி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடத்த தீமிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். திருத்தணி  அடுத்த, எஸ்.அக்ரஹாரம், மதுரா குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன்  கோவிலில், தீமிதி திருவிழா,  கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும், காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடந்தது. விழாவின் நிறைவு நாளான  நேற்று, நண்பகல், 11:30 மணிக்கு  துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் கோவில்  வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30  மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து  தீமிதித்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !