திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகம்
ADDED :3424 days ago
திருமலைக்கேணி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து தரிசனம் செய்தனர்.