உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமநவமி உற்சவம்

ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமநவமி உற்சவம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமநவமி மகோற்சவம் துவங்கியது. திருக்கோவிலுார்‚ கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில்‚ சத்சங்கம் சார்பில் 51வது ஆண்டு ஸ்ரீராமநவமி மகோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரவு 7:30 மணிக்கு ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் விழாவினை துவக் கிவைத்தார். பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் உபன்யாசம் துவங்கியது. வரும்30ம் தேதி வரை இரவு 7:30 மணிக்கு, கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. வரும் 31ம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு திவ்யநாம பஜனை நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 8:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி‚ பஜனை மற்றும் ராதா திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் நடராஜசர்மாவின் ஸ்ரீ மத்ராமாயண நவாக மூல பாராயணம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் சத்சங்க நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !