உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டிக் கொடுத்த மணி!

காட்டிக் கொடுத்த மணி!

வெண்ணெய் திருடுவதற்காக, ஆயர்பாடியில் இருந்த கோபியின் வீட்டுக்குள் நுழைந்தான் சின்னக்கண்ணன். உறியைத் தொட்ட மாத்திரத்தில்  அவர்கள் வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த மணி கணகண என ஓசை எழுப்பியது.  ஏ! மணியே! கோபியிடம் என்னை இப்படி காட்டிக் கொடுத்தா யே!, என்றான் கண்ணன். மணி அமைதியானது. பானையைக் கையில் எடுத்து சாவகாசமாக வாயில் வெண்ணெ#யைப் போட்டுக் கொண்டான்.   மீண்டும் மணி ஒலிக்கத் தொடங்கியது.ஏன் சப்தம் எழுப்புகிறாய்? என்று மணியைக் கோபித்தான். அப்போது, ஹே! கிருஷ்ணா! சர்வலோக நாயகா!  பகவானுக்கு நிவேதனம் ஆகும்போது ஒலி எழுப்புவது தானே என் பிறவிப்பயன். அதை செய்ய விடாமல் தடுக்கிறாயே! என்றது பவ்யமாக!  கண்ணன் திருடி உண்டதையும் நிவேதனம் என்றது அந்த மணி. பிறகென்ன! கண்ணன் வாயே திறக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !