தாழங்குணத்தில் பால்குட ஊர்வலம்
ADDED :3523 days ago
அவலுார்பேட்டை: தாழங்குணம் கிராமத்தில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, தாழங்குணம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்தனர். பிற்பகலில் பூங்கரக ஊர்வலமும், பின்னர் சாகை வார்த்தலும் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பால் அபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் முகமதுஷபி, ரகுராமன், நாட்டாண்மைகள் ஆறுமுகம், பெருமாள், மணி, கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.