உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

வாலாஜாபாத்: சந்திரமவுலீஸ்வரர் கோவில், கட்டுமான பணிக்காக நேற்று பாலாலயம் நடந்தது. படுநெல்லி கிராமத்தில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டுமான பணிக்காக, நேற்று காலை, 8:00 மணிக்கு, சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், படுநெல்லி கிராமத்தை சுற்றியுள்ள கிராமவாசிகள் கலந்து கொண்டனர். கோவிலில் கும்பாபிஷேகம் முடியும் வரை, பெரிய அளவில் வழிபாடு, பூஜைகள் நடைபெறாது. கோவில் சிலைகளுக்கு தனியிடத்தில் பூஜைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !