ரமலான் சிந்தனைகள்- 16: போதையை விடுங்கள்!
நபிகள் நாயகம், மது அருந்துதலின் தீமை பற்றி கடுமையாக எச்சரித்துள்ளார். ஒருமுறை நபிகள்நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். “இறை துாதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,” என்றார். அவரிடம் நாயகம், “அந்த மதுவில் போதை இருக்கிறதா?” என்றார். ஆம் என பதிலளித்த தோழரிடம், “அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,”என்றார். “சரி...நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,” என்று தோழர் சொன்னதற்கு, “அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,” என்றார். மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான். ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்தார்கள். நாயகம் அவர்களிடம், “இவரை அடியுங்கள்,” என்றார். சிலர் அவரை கையால் அடித்தனர். சிலர் துணியை முறுக்கி அடித்தனர். சிலர் செருப்பால் அடித்தனர். மதுவை இனி கண்ணால் கூட பார்ப்பதில்லை என்று உறுதியெடுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி.