உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூல மந்திர ஹோமம்

விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூல மந்திர ஹோமம்

திருவள்ளூர்;விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது.திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில் உள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று மூலமந்திர ஹோமம், சிறப்பு அர்ச்சனை நடைபெற்று வருகிறது. நேற்று, மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, மூல மந்திர ஹோமம், காலை 9:00 மணிக்கு துவங்கியது. 11:30 மணிக்கு, தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !