உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணகப்பட்டு கோவில் துரியோதனன் படுகளம்

கண்ணகப்பட்டு கோவில் துரியோதனன் படுகளம்

திருப்போரூர்: கண்ணகப்பட்டு, திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்போரூர்  பேரூராட்சிக்கு  உட்பட்ட கண்ணகப்பட்டில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 8ம் தேதி அக்னி வசந்த உற்சவ விழா  கொடியேற்றத்துடன் துவ ங்கியது. அன்றிலிருந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், இரவில்  திருவீதியுலாவும் நடைபெற்றது.  மேலும்,  கோவில் வளாகத்தில், மகாபாரத சொற்பொழிவும், இரவில் பாரத கூத்தும் நடைபெற்றது.  இந்நிலையில், 18ம் நாளான நேற்று காலை, 10:00  மணிக்கு, துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.   இதில் ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை  நிறைவேற்றினர். விழாவில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து  ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !