உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் ஏற்பாடு தீவிரம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் ஏற்பாடு தீவிரம்

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா, 26ம் தேதி நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் - தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆறு அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடிக்குண்டம் விழா வரும், 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கிறது. 22ல் லட்சார்ச்சனையும், 23ல் கிராமசாந்தி, 24ல் கொடியேற்றமும், சிம்மவாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. வரும், 25ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 26ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அடுத்து, 27ம் தேதி மாவிளக்கு பூஜையும், மாலையில் பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 28ல் இரவு பரிவேட்டை, வாண வேடிக்கையும், 29ல் மகா அபிஷேகமும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. ஆக., 1ம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 2ம் தேதி ஆடி அமாவாசை, ஆடி 18 பெருக்கு மற்றும் மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !