உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும்  தீபாராதனையும் நடந்தது.  பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  புதுச்சத்திரம்: மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில்  அமாவாசையை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன்  உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 9.00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம்  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !