விருத்தாசலம் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம், பெண்ணாடம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:45 மணியளவில் பால், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.
பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவில் முன் மண்டபத்தில் உள்ள அதிகார நந்திக்கு காலை 8:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் கொடி மரம் அருகிலுள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு விநாயகர், பிரதோஷ நாயகர், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், நந்தி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.