தொரவி கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :3368 days ago
விக்கிரவாண்டி: தொரவி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு, பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர். சிறப்பு பூஜையில், புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம், தொழிலதிபர் சுப்ரமணி, வழக்கறிஞர் சம்பத், உழவர்கரை காங்., பிரமுகர் செல்வராஜ், ஊராட்சித் தலைவி நாகேஸ்வரி சங்கர், ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.