தோப்பு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :3366 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் தோப்பு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை, வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தீ மிதி விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி காலை 10:00 மணிக்கு அக்னி குண்டத்திற்கு தீ மூட்டும் வைபவமும், மாலை 4:00 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.