சிறுபாக்கத்தில் பால்குட ஊர்வலம்
ADDED :3398 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஆடி பெருக்கை முன்னிட்டு, சிறுபாக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.