உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபாளையத்தம்மன் கோவில் வீதிஉலா

பெரியபாளையத்தம்மன் கோவில் வீதிஉலா

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தம்மன் கோவில், தீ மிதி திருவிழாவில், உற்சவர் அம்மன், வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எல்லாபுரம் ஒன்றியம், பெரம்பூர், பாஞ்சாலி அம்மன் நகரில் உள்ளது, பெரியபாளையத்தம்மன் கோவில். இக்கோவிலில், 10 நாட்கள் தீ மிதி திருவிழா, 29ம் தேதி துவங்கியது.  முதல் நாள், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின், ஒவ்வொரு நாளும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலாவும் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 7ம் தேதி இரவு, தெருக்கூத்து நடந்தது.  விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தீ மிதி திருவிழா நடந்தது. இதில், பகுதிவாசிகள், 50க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீ மிதித்தனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !