மழை வேண்டி போடி ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரம்
ADDED :3485 days ago
போடி : போடியில் பல மாதங்களாக மழையில்லாத காரணத்தினால் ஆறுகள், கண்மாய்கள், விவசாய நிலங்களும் வறண்ட நிலையில் உள்ளன. ஆடி மாதம் துவங்கியும் கூட விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிப்படைந்து வருகின்றனர். போடி ஐயப்ப பக்த சபை சார்பில், விவசாயிகளின் நலன் கருதியும், மழை வேண்டியும் ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு நெற்கதிர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பாயசத்துடன் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த சபை தலைவர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தினை பட்டாச்சியார் கமலக்கண்ணன் செய்திருந்தார்.