உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழா

எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழா

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி, எல்லையம்மன் கோவில் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், அக்கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. காவில் மூலவர், சன்னிதி, உட்பிரகாரம், வெளி மண்டபம் என, அனைத்து பகுதிகளும் பல வண்ண மலர்களால் அலங்காரிக்கப்பட்டிருந்தன. அன்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். அன்று இரவு, அம்மன், வீதிஉலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதிஉலாவின் போது, கிராமவாசிகள், தெருக்களில் கோலமிட்டு, அம்மனுக்கு படையலிட்டு, வழிபட்டனர். பல பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழாவை கண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !