உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டுமுளை கோவிலில் 13ம் தேதி சாகை வார்த்தல்

கோட்டுமுளை கோவிலில் 13ம் தேதி சாகை வார்த்தல்

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த பெரியகோட்டுமுளை முத்துமாரியம்மன் கோவிலில், 13ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி,  கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி, காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணியளவில் அம்மன்  வீதியுலா, காத்தவராயன் கதைப் பாட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி காலை 9:00 மணியளவில் கருப்புசாமி, அய்யனார்  சுவாமிகளுக்கு ஊரணி உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 13ம் தேதி பகல் 12:00 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !