உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 5 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம்: ஈச்சம்பட்டி மக்கள் உற்சாகம்

5 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம்: ஈச்சம்பட்டி மக்கள் உற்சாகம்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள, மாரியம்மன் கோவிலில், நேற்று தேரோட்ட திருவிழா நடந்தது. ஆத்தூர் அருகே, ஈச்சம்பட்டி கிராமத்தில், பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு, செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பால் குட ஊர்வலம் என, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று, காலை பொங்கல் வைத்து வழிபாடு செய்ததுடன், தேன், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர், தேரில், மாரியம்மன் சாமியுடன், ஊரின் முக்கிய வீதிகளில் பக்தர்கள் இழுத்துச் சென்றனர். கடந்த, ஐந்து ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்தது. நேற்று நடந்த தேர் திருவிழாவில், ஆத்தூர், மல்லியக்கரை, ஈச்சம்பட்டி, கீரிப்பட்டி, சீலியம்பட்டி, தாண்டவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !